Posts

வானியற்பியல் புத்தகம்

Image
Astrophysics for People in a Hurry என்ற புத்தகம் (தமிழில் அவசரமாய் செல்வோருக்கு வான இயற்பியல் என்று சொல்லலாம்) இயற்பியலாளர் நீல் டீகிரீஸ் டைசனால் எழுதப்பட்டுள்ளது. புத்தகம் வானியல் குறித்த பல்வேறு விஷயங்களை அலசுகிறது. https://amzn.to/46alMaw காமா கதிர்கள் முதல் ரேடியோ அலைகள் ஈறாக ஒட்டுமொத்த மின்காந்த அலைகளைப் பற்றி மிக விரிவாக விளக்குகிறார் டைசன். எந்தெந்த அலை நீளங்களைக் கொண்டு எந்தெந்த வானியற்பியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன என்பது குறித்தும் தெளிவுற விளக்குகிறார். உதாரணமாக மைக்ரோ அலைகளைக் கொண்டு பிரபஞ்சத்தின் பின்புல வெப்பநிலையைக் கணக்கிடலாம் என்றும், ரேடியோ அலைகளைக் கொண்டு துடிப்பு விண்மீன்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் எனவும் விரிவாக விளக்குகிறார். https://amzn.to/46alMaw  பிரபஞ்சம் தோன்றிய முதல் மூன்று நிமிடங்களில் பிரபஞ்சம் எவ்வாறு இருந்திருக்கக்கூடும் என்பதில் ஆரம்பித்து பூமியின் உருவாக்கம் வரை முதல் இந்நூல் தெளிவாக விளக்குகிறது. முதல் எலக்ட்ரான் தோன்றியதிலிருந்து பிரபஞ்சத்தில் இன்றைய நிலை வரை சற்று விரிவாகவே அலசுகிறது.  https://amzn.to/46alMaw இந்நூல் பூமியைப் ப

ஆஷஸ் தொடரும் ஸ்டீவ் ஸ்மித்தும்

Image
ஆரவாரமான ஆஷஸ் தொடர் நாளை ஆரம்பிக்கிறது.. இதுக்கு முன்னாடி ஒரு சின்ன ப்ளாஸ்பேக்... 2019 இல் இங்கிலாந்தில் ஆஷஸ் தொடர் நடந்தது. அதுக்கு முன்னாடி இரண்டு வருஷமா ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சந்தித்த தோல்விகள், அவமானங்கள் அதிகம். அணியை வழிநடத்த சிறந்த வீரர்கள் இல்லாதது, அணியின் இரு பெரும் தலைகளான வார்னரும், ஸ்மித்தும் தடையைச் சந்தித்தது ஆகியவை அவர்களை மனதளவில் பெரிதும் பாதித்தது. மேலும் ஆஸ்திரேலியாவின் முக்கிய பலமான அதன் ரசிகர்கள் பட்டாளத்தையும் அந்த அணி கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் துவங்கியது. 2017–2019 ஆகிய காலகட்டங்கள் ஆஸ்திரேலியாவிற்கு மிகவும் கசப்பான அனுபவத்தை தந்தது. தனது சொந்த மண்ணில் இந்தியாவுடன் டெஸ்ட் தொடர் தோல்வி, அதற்கு முன்னர் டெஸ்டில் சரியாக விளையாடாத பாகிஸ்தானிடம் தட்டுத்தடுமாறி தொடரைச் சமன் செய்தது. இங்கிலாந்திடம் ஒருநாள் தொடரில் இங்கிலாந்து மண்ணில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது. (இங்கிலாந்து ஒருநாள் போட்டியில் தனது அதிகபட்சமான ஸ்கோரை இவர்களுடன் பதிவு செய்தது. 481/6).  50 ஓவர் உலகக்கோப்பைத் தொடரில் தோல்வியைச் சந்தித்தது. பேட்டிங்கில் சொதப்பல்கள், ஸ்டார்க் போன்ற முன்னணிப் ப

ஐசிசி டெஸ்ட் உலகக்கோப்பை ஒரு அலசல்

Image
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை ஆஸ்திரேலியா வென்றுவிட்டது. இரண்டாவது முறையாக இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குச் சென்று தோல்வியை பரிசாக பெற்றுத் திரும்பி உள்ளது. ஒரே ஆறுதல் என்னவெனில் இன்னிங்ஸ் தோல்வியைச் சந்திக்கவில்லை என்பதுதான். சரி இந்த தோல்விக்குக் காரணம் தான் என்ன? எவ்வாறு சரி செய்வது? இந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு போன அணி எந்த விதத்திலும் தயாராகவே இல்லை. குறிப்பாக இந்திய வீரர்கள் ஐபிஎல் மைன்ட் செட்டில் இருந்து வெளிவரவே இல்லை. எப்போதும் டெஸ்ட் போட்டிகளுக்கு மனதளவில் ஆஸ்திரேலிய வீரர்கள் தயாராகி வருவார்கள்.  குறிப்பாக அவர்களுக்கு  ஆஷஸ் தொடர் குறித்த மிகப்பெரிய தாகம் இருக்கும். அதன் விளைவாக தற்போது நடந்த பைனலுக்காக அவர்கள் வருவதை விட ஆஷஸ் க்காக தயாராகி வந்தனர். ஆஷஸில் விளையாடும் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி மற்ற எந்த டெஸ்ட் அணிகளை விடவும் அசுர பலத்தோடு இருக்கும். இதுவும் ஒரு காரணம் அவர்களை நாம் வீழ்த்த முடியாததற்கு. இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் போட்டியில் நீண்ட நேரம் நிற்க வேண்டும் என்பதை மறந்து விட்டனர் போலும். குறிப்பாக டாப் ஆர்டரில் அவர்

ஏன் தோனி கொண்டாடப்படுகிறார்?

Image
96-2007 வரை கிரிக்கெட் பார்த்தவர்களுக்கு .. இந்திய டீம் ல ஜாம்பவான்களோட காலம்.. சச்சின், கங்குலி, டிராவிட்,சேவாக், ஜாகீர்,கும்ளே, லெட்சுமண்,யுவராஜ் இப்படி பலரும் உலா வந்த காலம். இவ்வளவு இருந்தும் சில குறைகளை இந்திய அணியில் ரசிகர்கள் உணர்ந்தனர். மற்ற அணியில் எல்லாம் விக்கெட் கீப்பர்கள் நல்ல ஹிட்டர்களாகவும், லோவர் மிடில் ஆர்டரில் வந்து கடைசி ஏழு எட்டு ஓவர்களில் ரன் ரேட்டை வேகப்படுத்தி ஸ்கோரை அதிகரிக்கவும் செய்தனர்.   பிரமாதமான கீப்பிங்கில் அவர்களைத் தாண்டி, பெரும்பாலும் பந்து நகராதவாறு அரணாக நின்றனர். உதாரணமாக கில்கிறிஸ்ட், பவுச்சர், சங்க்காரா போன்ற லெஜன்டுகள். இதையெல்லாம்  பார்த்த இந்திய ரசிகர்கள் நமக்கும் இப்படி ஒரு கீப்பர் அமைய மாட்டாரா என்று காத்திருந்தனர். இந்திய அணியும் அதற்கேற்ப மோங்கியா, டிராவிட், பார்த்திவ், கார்த்திக் என்று மாற்றி மாற்றிப் பார்த்தாலும் ஸ்டான்டர்ட் விக்கெட் கீப்பர் ஒருவரை கண்டுபிடிக்க இயலவில்லை.   அப்போதுதான் ஒருவர்  ஹீரோ மாதிரி வந்தார்.. தலை நிறைய முடியுடன் வந்து துடிப்பான விக்கெட் கீப்பராகவும், அதிரடியாக பேட்டிங் ஆடவும் செய்தார்.   அவர் தான் மகேந்திரசிங் த

பறவை பறந்த கவிதை

Image
ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த ஒரு பறவை பறந்து விடுகிறது.. நம்மைப் பொறுத்தவரை சாதாரணமாய் முடிந்த ஒரு நிகழ்ச்சி இது.. ஆனால் இதை ஒரு கவிஞர் கவிதையாக்கி விடுகிறார்.. "காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும் இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே.." நா.முத்துக்குமார் வரிகளில் ஜிவி.பிரகாஷ்குமார் இசையில் பூக்கள் பூக்கும் தருணம்.   Na Muthukumar Books   காதல் சாதாரணருக்கே கவிதை உருவாக்கி விடும் போது நா.முத்துகுமார் என்னும் பெருங்கவிஞரை என்னவெல்லாம் செய்யும்.. காதலைக் கொண்டாடித் தீர்த்திருப்பார் இந்தப் பாடலில் .. அந்த பறவை கிளையில் இருந்து பறந்ததும் அந்த கிளையில் உள்ள இலைகள் பறவை ஏற்படுத்திய அசைவால் நடனம் தொடங்குகிறதாம்.. இயற்கையை நேசித்த கவிஞர் நா.முத்துகுமார்.  இதற்கு இன்னொரு பொருளும் உண்டு.. காதலில் இருக்கும் போது, நாம் காதலிப்பவர் நம் மனதில் ஏற்படுத்தும் காதலின் தாக்கம் என்பது, காதலனை/லியை சந்தித்து திரும்பிய பிறகும் இருக்குமாம்..  Na Muthukumar இந்த படத்தில் (மதராச பட்டிணம்) காதல் பகுதியே இந்த கரு தான்.. பரிதியும் துரையம்மாவும் நீண்ட நேரம் சந்திச்சுக்கிட்டதே இல்லை... ஆனா

மைக்கேல் மதன காமராஜன் எனது பார்வையில் பாகம் 5

Image
மைக்கேல் மதன காமராஜன் பற்றி தொடர் பதிவுகளில் பாகம்-5 இங்கே.. இதன் முந்தைய பாகங்களை இந்த இணைப்பில் காணலாம்.. வழக்கமான காதல் காட்சின்னா பூ ரெண்டு உரசுறாப்ப சீன்இருக்கும்.. அத கலாய்ச்சு ஒரு புரொபோசல் சீன்..😀 அட அவ்வை சண்முகி நாகேஷ் கமல் ரெபரன்ஸ் இங்க ஒரு சீனோட எக்ஸ்டென்சன் தான் போல படம் ஆரம்பத்தில இருந்தே கிளைமாக்ஸ் தான்.. கடைசி 45 நிமிசம் முழு கிளைமேக்ஸ் World Cinema Articles in Tamil இந்த படம் மாதிரி இப்படி சீன் பை சீன் தீவிர ரசனையோட ஒரு படம் எடுக்கறது ரொம்ப கஷ்டம்.. இதை ரீமேக் பண்றதும் ரொம்ப கஷ்டம். இங்க எதுக்கு கமலும் குஷ்புவும் ட்ரெஸ் செலக்சன பத்தி்பேசறாங்கன்னு யோசிச்சா, அடுத்த சீன்ல ட்ரெஸ் கலர் தான் பாட்டும் (பேர் வச்சாலும் பாட்டு) கதையோட ஓட்டமும் தீர்மானிக்கப் போகுது.. ஒவ்வொரு டயலாக்கும் சிரிக்க வைக்குற லெவல்ல ரைட்டிங் கிரேசி மோகன் ராஜூ கமல், குஷ்பு லவ் புரொபொசல் அப்போ கமல் இந்த வீடு என்னோடது இல்லன்னா என்ன விட்டு போயிர மாட்டியேன்னு குஷ்புட்ட கேப்பாரு.. இங்கேயே ரூபினி பத்தி ஹிடன் டீடெயில் வரும்.. (ரூபினி மதன் கமலை பணக்காரன்னு தான் லவ் பண்வாப்ள).. ரொம்ப ரொம்ப தெளிவாக கிளைமாக்ஸ் தவிர

மைக்கேல் மதன காமராஜன் - எனது பார்வையில் பாகம் 4

Image
 நுணுக்கமான டீடெயிலிங்கோட  ஒரு சிறந்த படம்தான் மைக்கேல்  மதனகமராஜன். அந்த படத்தை பற்றி தொடர் பாகங்களாக படித்து வருகிறோம். முதல் பாகம் இணைப்பு  அதன் நான்காம் பாகம் இங்கே பார்க்கலாம். திரிபுரசுந்தரி மற்றும் காமேஸ்வரன் சந்திப்பு  வீட்டில் நிகழும். இதன் நீட்சியாக வரும் சுந்தரி நீயும் பாடலும் வீட்டு உட்பகுதியிலேயே இருக்கும்.  அதாவது பாடலுக்காக மட்டும் கனவு காட்சியாக வெளிநாடுகளுக்கு பறந்து செல்லாமல் வீட்டுக்குள்ளேயே இந்த பாடலும் வரும் வண்ணம் ரசிகர்களை கட்டிப்போட்டு மேஜிக் செய்திருக்கிறார்கள்.  கூடவே இசைஞானி இசையும். மலையாள பாணியில், அதுலயும் கமல் தான் பாடுறாரு.  இந்த சண்டைக்காட்சியில் மதன் ரூபினி மற்றும் ராஜு ஆகியோர் ஒரு பொது கழிப்பறையில் நிகழும் சண்டைக்காட்சியில் நடைபெறுகிறது. Learn more interesting facts about tamil Cinema - Cinema Kottagai - Baskaran  இங்கு எப்படி ராஜு வருகிறார் என்ற கேள்விக்கு முன்னமே ராஜூவே சொல்லியிருக்கிறார் தான் ஒரு பகுதிநேர நாடக கலைஞர் என்று. அவரும் ரூபினி பங்குபெற்ற இந்த நாடக மேடைக்கு பகுதிநேர நாடகம் போட வந்திருக்கிறார். அவரே இன்னொரு காட்சியில் சொல்வார் தாங்கள் ப

மைக்கேல் மதன காமராஜன் எனது பார்வையில் பாகம் 3

Image
மைக்கேல் மதன காமராஜன் படம் குறித்து உள்ளார்ந்த பல விஷயங்களை தொடர் பதிவாக பார்க்கிறோம் அதன் பாகம்-3 இந்த பதிவில் பார்க்கலாம்.  முதல் பாகம் இணைப்பு இங்கே இ ரண்டாம் பாகம் இங்கே Tamil Cinema 100 அட இந்த ஷாட்ல பின்னாடி இருக்கிற சாம்பார் பாத்திரத்தில் கமல் கையில் இருந்த சாம்பார் ஊற்றும் பாத்திரம் மூழ்கும். அதாவது தவறுதலாக வந்த  மீன் அந்த சாம்பார் பாத்திரத்தில் விழ இருக்கிறது என்பதை திட்டவட்டமாக தெரிவிக்க அந்த காட்சி. மதன் கதாபாத்திரத்தை எங்கே விட்டோம் ஞாபகமிருக்கிறதா ஒரு போன் காட்சி வாயிலாக. அதன் தொடர்ச்சியாக மதன் காதாபாத்திரம் மீண்டும் அறிமுகப்படுத்தும்போது போனில் இருந்து ஆரம்பிக்கிறது. இந்த ஷாட்ல மதன் கமலுக்கு வரும் தொலைபேசியை நாகேஷ் ஒட்டுக் கேட்பார்.  அதாவது அவர்கள் பேசிக் கொண்டிருக்கக் கூடிய விஷயம் மதன் கமலின் அப்பா இறந்தது பற்றிய விஷயம் என்பது. அது எங்கு நடந்தது ஒரு மலை முகடு அல்லது மலை முகட்டை நோக்கி போகும் பாதை. இதை சொல்லும் வகையில் நாகேஷின் பின்னணியில் ஒரு மலை  புகைப்படம் இருக்கும். மேலும் இந்த கதை அடுத்து யாரை நோக்கி நகர போகிறது என்றால் தீயணைப்பு வீரரான ராஜூவை நோக்கி நகர இருக்கிறது.

மைக்கேல் மதன காம ராஜன் - எனது பார்வையில் பாகம் 2

Image
மைக்கேல் மதன காமராஜன் படம் பற்றிய நுணுக்கமான குறியீடுகள் குறித்து பார்த்து வருகிறோம் அதன் முதல் பாகம் இணைப்பு இங்கே https://atomtamil.blogspot.com/2022/03/mmkr-1.html?m=1  அதன் தொடர்ச்சியான பாகம் 2 இங்கு பேசுவோம்  அதே மாதிரி ஒரு சீனில் இருந்து இன்னொரு சீனுக்கு சிறுசிறு பொருட்கள் வழியாகவும் காட்சிகள் நகர்த்தப்பட்டு இழுக்கும். டிராமாவில் ரூபினியின் கையிலிருந்த ஒரு பொம்மை கத்தி அடுத்த சண்டைக் காட்சிக்கு பிறகு மதன் மற்றும் ராஜூவை இணைக்கும் ஒரு துருப்பு சீட்டாக பயன்படும். அதே போல கமல் குஷ்பூ சந்திக்கும் முதல் இரு காட்சிகள் தண்ணீரை மையமாக வைத்து இருக்கும். குறியீடுல பின்னியிருக்காங்க. அட ராஜூவின் இரண்டு டூயட் காட்சியும் மஞ்சள் உடை.. (ரம்பம்பம் ஆரம்பம், பேர் வச்சாலும் பாடல்)  தீயணைப்பு வீரராம் ராஜூ.. அதனால மஞ்ச சொக்கால டான்ஸ்.. தீயும் நீரும்.. ராஜூவும் குஷ்பூ வுமாம்.. குறியீடு. ஒவ்வொரு காட்சியின் பொருட்கள் தான் அடுத்தடுத்த ஒவ்வொரு காட்சியையும் சம்பந்தப்படுத்தி அதற்கு அடுத்து வரும் காட்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். மதனுக்கும் மைக்கேலுக்கும் சம்பந்தம் பணம். அதனால் மைக்கேலுக்கு  ஆரம்பக

மைக்கேல் மதன காமராஜன் - எனது பார்வையில் - பாகம் 1

Image
தொடர்ச்சியான ஆய்வுகள் செய்து வரும்போது சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளும் விதமாக நல்ல இசையைக் கேட்பது அல்லது நல்ல படங்களைப் பார்ப்பது எனது வழக்கம். அப்படி நான் பார்த்து வியந்த ஒரு திரைப்படங்களில் ஒன்று, மைக்கேல் மதன காமராஜன் திரைப்படம். அந்த படத்தை பற்றி நான் இங்கு எழுத விழைகிறேன். என்னடா இது அறிவியல் வலைப்பூவில் திடீரென சினிமா எழுதுகிறானே என்று வியக்க வேண்டாம் மக்களே.. இந்த திரைப்படம் பற்றி நீண்ட நாள் எழுதவேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. அதனால் தான் இந்த வலைப்பூவில் ஒரு திரைப்பட பதிவு. ஒரு  சினிமா ரசிகனாக இப்படத்தில் நான் பார்த்த விஷயங்களை இங்கு பதிவிடுகிறேன். ஒரு நல்ல திரைப்படம் என்ன பண்ணும்... நல்ல ரசிகனை வியந்து பார்க்க வைக்கும். அப்படி ஒரு படம் தான் வெளியாகி,   32 ஆண்டுகள் ஆகியும் கூட இப்போதும் ஃபரெஷ்ஷாக இருக்கும் மைக்கேல் மதன காம ராஜன் படம்.   ரொம்பவே நுணுக்கமாக எடுக்கப்பட்ட மைக்கேல் மதன காமராஜன் படத்தைப் பற்றி நாம் இந்த நீள் பதிவில் காணலாம். இந்த திட்டத்தை பல பேர் பல விதமாக ரசித்த விலகியிருந்தாலும் எனது பார்வையில் தெரிந்த சில விஷயங்களை தொகுத்து எழுதுகிறேன். இந்த படம் 1990 தீப