விண்வெளியில் இயங்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் விண்வெளி ஆய்வாளர் ஒருவர் தொழில்நுட்ப ப் பணிகளில் ஈடுபடுவதைக் காணலாம். பின்புலத்தில் பூமியையும் காணலாம்
விசித்திரன் encleadus Encleadus சனி கோளின் துணைக்கோள்களில் ஒன்று. மிகவும் விசித்திரமான கோள் ஆகும் அதாவது இக்கோளின் தென்துருவம் மிகவும் வழவழப்பாகவும், இதன் வடதுருவம் கரடுமுரடாகவும் காணப்படுகிறது. வடதுருவம் அதிகமான எரிகற்கள் தாக்குதலுக்கு உள்ளானதை இங்கு காணலாம்.இந்த புகைப்படம் நாசா அனுப்பிய கசினி ஆய்வுக்கலம் மூலம் எடுக்கப்பட்டது. credit : NASA நடராஜன் அணுவும் தமிழும்
ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த ஒரு பறவை பறந்து விடுகிறது.. நம்மைப் பொறுத்தவரை சாதாரணமாய் முடிந்த ஒரு நிகழ்ச்சி இது.. ஆனால் இதை ஒரு கவிஞர் கவிதையாக்கி விடுகிறார்.. "காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும் இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே.." நா.முத்துக்குமார் வரிகளில் ஜிவி.பிரகாஷ்குமார் இசையில் பூக்கள் பூக்கும் தருணம். Na Muthukumar Books காதல் சாதாரணருக்கே கவிதை உருவாக்கி விடும் போது நா.முத்துகுமார் என்னும் பெருங்கவிஞரை என்னவெல்லாம் செய்யும்.. காதலைக் கொண்டாடித் தீர்த்திருப்பார் இந்தப் பாடலில் .. அந்த பறவை கிளையில் இருந்து பறந்ததும் அந்த கிளையில் உள்ள இலைகள் பறவை ஏற்படுத்திய அசைவால் நடனம் தொடங்குகிறதாம்.. இயற்கையை நேசித்த கவிஞர் நா.முத்துகுமார். இதற்கு இன்னொரு பொருளும் உண்டு.. காதலில் இருக்கும் போது, நாம் காதலிப்பவர் நம் மனதில் ஏற்படுத்தும் காதலின் தாக்கம் என்பது, காதலனை/லியை சந்தித்து திரும்பிய பிறகும் இருக்குமாம்.. Na Muthukumar இந்த படத்தில் (மதராச பட்டிணம்) காதல் பகுதியே இந்த கரு தான்.. பரிதியும் துரையம்மாவும் நீண்ட நேரம் சந்திச்சுக்கிட்டதே இல்...
தமிழில் எவ்வளவோ நல்ல புத்தகங்கள் வந்துள்ளன. பல எழுத்தாளர்கள் தமது பங்களிப்புகளைத் தமிழில் செய்து வருகிறார்கள். பல்வேறு தேடல்கள் கொண்ட அறிஞர்கள் தமிழ்ப் புத்தகங்கள் மூலம் பல்வேறு ஆழமான கருத்துக்களை எழுதிவைத்துள்ளனர். அவ்வகையில் தமிழில் அறிவியலைத் தெரிந்துகொள்ள ஏதுவாக உள்ள சில புத்தகங்களைப் பற்றி இந்த தொடரில் எழுத இருக்கிறேன். தமிழில் இயற்கையைப் பற்றியும் வானியலை பற்றியும், பிரபஞ்சத்தின் இயக்கங்களைப் பற்றியும், ஆழமாக சில அறிஞர்கள் எழுதியுள்ளனர். மேலும் பல மேற்கத்திய அறிஞர்களின் புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்தும் வைத்துள்ளனர். அவற்றில் ஒன்றாக சமிபத்தில் வெளியான ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள் என்ற புத்தகத்தை இங்கு அறிமுகம் செய்கிறேன். இந்தப் புத்தகம் ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களால் எழுதப்பட்டது. தமிழில் குமாரசாமி என்பவரால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் கடவுள் என்ற நிலை உண்மையிலேயே இருக்க முடியுமா? இந்த பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது? எவ்வாறு இயங்கிவருகிறது? மனித இனம் எவ்வாறு தோன்றியது? இந்த பூமியில் உயிரினங்கள் எவ்வாறு தோன்றியது? என்பது போன்ற கேள்விகள் குறித்து ஆ...
Comments
Post a Comment